ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்தக்கோட்டை கிராமத்தில் நூலக வசதி இல்லை. இதனால் இந்த கிராமத்தில் படிக்கும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். எனவே இந்த கிராமத்தில் நூலகம் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.