திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கே.பெரியபட்டி ஊராட்சி கத்திக்காரன்பட்டியில் உள்ள அங்கன்வாடி கட்டிடமானது விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த அங்கன்வாடியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். எனவே விபரீதம் ஏதேனும் ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.