புதுக்கோட்டை தாலுகா, பெருங்களூரில் தபால் நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 அலுவலகங்களுக்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகங்களை சுற்றி செடி, கொடிகள் அதிக அளவில் முளைத்து காடுபோல் உள்ளதால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.