ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சம்பூரணி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளிகட்டிடம் சேதமடைந்த நிலையில் மேற்கூரை இடிந்த வண்ணம் உள்ளது. மழைக்காலத்தில் நீரானது பள்ளிக்குள் புகுந்துவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பள்ளிகட்டிடத்தை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.