பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா குரூர் கிராமத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஆங்காங்கே மழை தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் சிக்கி கீழே விழுந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.