சேலம் மணக்காடு, அன்பு நகர், ராஜகணபதி நகர் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சிறுவர்கள், வயதானவர்கள் தெருவில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் திடீரென ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.