திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியில் உள்ள ராதா நஞ்சை கிராமத்தில் சாலையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் வேலியை சாலையில் அமைத்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் உள்ள வேலியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் ,திருக்காரவாசல்