புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் சாலையோரத்தில் வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் தற்போது பெய்த மழைநீர் சாக்கடை நீர்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.