திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் ஊராட்சி, மாணிக்கபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் மக்கள் தெற்கு வாய்க்கால் கரையை கடந்து செல்வதற்காக வாய்க்காலில் சிறிய பாலம் அமக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பாலம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த பாலம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.