பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதிகளில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.