கரூர் மாவட்டம், ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் அருகே வி.ஜி.பி. நகர் எதிரே சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தை மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பிடுங்கி சாலை ஓரத்தில் போட்டுள்ளனர். தமிழக அரசு பனைமரங்களை பாதுகாக்கும் வகையில் பனை மரங்களை வெட்டவோ, பிடுங்கவோ கூடாது என உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு பனைமரத்தை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் பிடுங்கி சாலை ஓரத்தில் போடப்பட்டு கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.