ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முகில்தகம் கிராமத்தில் ரேஷன் கடை இடிந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடன் வந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்