கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், பாலவிடுதி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைலம்பட்டி அல்லது 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடவூருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலவிடுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.