செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-25 11:39 GMT

திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ்ரோட்டில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் உள்ளது. இதன் அருகிலேயே தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் நிலையமும் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகே விபத்து வழக்கில் சிக்கிய கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கார் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கார் மீது செடி, கொடிகள் படர்ந்து காரே தெரியாத அளவுக்கு மறைத்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பாரதிதாசன் சாலையில் இருந்து போலீஸ் அதிகாரிகள் கிளப் வழியாக வரும் வாகனங்கள் வார்னஸ்ரோட்டில் வலதுபுறமாக திரும்பும்போது, இந்த செடி, கொடிகள் ஒருபக்கம் மறைத்து விடுகிறது. இதனால் அந்த வளைவில் திரும்பும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் நிலைய கட்டிட சுவரையொட்டி படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்