கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே குளத்துப்பாளையத்தில் அப்பகுதியை சேர்ந்த இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் அப்பகுதியில் மயானம் கட்டப்பட்டது. இந்நிலையில் மயானம் முழுவதும் பல்வேறு வகையான செடி கொடிகள் முளைத்து இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மயானத்தில் முளைத்துள்ள பல்வேறு செடி கொடிகளை அகற்றி மயானத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.