கரூர், காமராஜ் மார்க்கெட் பகுதியில் உள்ள நிழற்குடையின் உள்ளே சிலர் வாழை மரக்கட்டுகள் மற்றும் தேவையில்லாத பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் பயணிகள் உட்காருவதற்கும், நிற்பதற்கும் இடம் இல்லை. எனவே, பயணிகளும், பொதுமக்களும் இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. பொதுமக்களுக்காக கட்டப்பட்ட இந்த நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.