புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் இருந்து சாந்தசுவாமி கோவிலுக்கு செல்லும் சாலையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நேராக சென்றால் தஞ்சாவூருக்கு சென்று விடாலம். ஆனால் சிலர் அப்பகுதியில் தஞ்சாவூர் செல்லும் வழி என்று ஊர் பெயர்பலகை இல்லாதாதல் தஞ்சாவூருக்கு செல்பவர்கள் சாந்தநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் சாலையில் திரும்பி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு கால விரயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான ஊர்பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.