கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் மற்றும் பாரதி நகர் பகுதிகளில் பகலில் மர்மநபர்கள் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடி வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இரவு நேரங்களில் மலைக்கோவிலூர் மற்றும் பாரதி நகர் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.