கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் சார்பில் அவர்களின் வீடு மற்றும் தெருக்களின் முகப்பு பகுதி, கடைகள் போன்றவற்றில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சுதந்திரதினம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் பல பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் குச்சி, கம்பம் போன்றவற்றில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது. இது நமது நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே வீடு மற்றும் தெருக்களில் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடியை அவரவர்களே அகற்றிக்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கை விடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.