ஆபத்தான வாய்க்கால் பாலம்

Update: 2022-08-23 12:58 GMT

பெரம்பலூர் மாவட்டம், குருர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வாய்க்காலில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து இடிந்த நிலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் சிறுவர், சிறுமிகள், வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் முன்பு இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்