கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்தோமா நகரில் சாலையின் இருபுறமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூங்கில் மரங்கள் அடியோடு சரிந்து சாலையில் விழுந்தது. பின்னர் அந்த மூங்கில் மரங்கள் உடனடியாக அறுத்து அகற்றப்பட்டது. ஆனால் அதன் அடிப்பாகங்கள் சாலையின் இருபுறமும் அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கிறது. இதனால் இரவில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மூங்கில் மரங்களின் அடிப்பாகத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.