ஊட்டி மார்க்கெட்டுக்குள் மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் காய்கறிகள் இறக்க வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கி விடுகின்றன. இதன் காரணமாக டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் அங்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே மார்க்கெட்டுக்குள் வாகனங்கள் காய்கறிகளை இறக்கும் பகுதியை மண் முடி சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.