திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் 4-ம் பிரகாரத்தில் வடக்கு மற்றும் தெற்கு உள்வீதிகளில் திருச்சி மாநகராட்சியின் ஶ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் வாயிலாக "மதில்சுவர் பூங்கா" பராமரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது பூங்காவில் மரம், செடி-கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி தருவதுடன், விஷ ஜந்துக்களும் நடமாடிக்கொண்டு பொலிவிழந்து காணப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.