சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-08-23 11:10 GMT

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. இதன்காரணமாக மேற்கண்ட பகுதிகளில் வாகனஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் மாடுகள் அவ்வபோது முட்டிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்