மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த திருமுல்லைவாசலில் உள்ள சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்புகளால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?