நாய்கள் தொல்லை

Update: 2022-08-22 15:45 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் உள்ள சாலைகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோட்டூர் பகுதி சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்