கழிவுகளை அகற்ற வேண்டும்

Update: 2024-02-11 17:12 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் கிடந்த குப்பைகள், கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்