ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் ஆரணி-தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் ஆரணி நகர எல்லை பகுதிக்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள். குப்பைகளில் கொசுக்கள், புழுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, ஆரணி.