குப்பை தொட்டி வைக்கலாமே!

Update: 2026-08-30 17:34 GMT

கன்னங்குறிச்சியில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையானது பள்ளி, கல்லூரி வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்த சாலையில் கொண்டப்பநாயக்கன்பட்டி பிரிவு அருகே உள்ள இடத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெருநாய்கள் குப்பைகளை ரோட்டில் பரப்பி விடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அங்கு குப்பை தொட்டி வைத்து, தினமும் குப்பைகளை எடுத்து செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே!


மேலும் செய்திகள்