திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் குப்பைகள் நிறைந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மாடுகள் அந்த குப்பைகளை கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சந்தைக்கு வரும் மக்கள் உள்பட சாலையோரம் செல்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?.