வேலூர் மாநகராட்சி வார்டு எண்:4-ல் செங்குட்டை ஜான் தெரு பகுதியில் நெடுஞ்சாலை கூடும் இடத்தில் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் எங்கள் தெரு பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நாய்கள் குப்பைகளை கிளறுவதால் குப்பைகள் காற்றில் பறக்கின்றன. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி. சுதாகர், காட்பாடி.