குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-08-23 09:46 GMT

காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக காங்கயம் அரசு மருத்துமனை வளாகத்திற்குள் வெளியே டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், மருத்துவமனை சுவரை ஒட்டி கொட்டப்படுவதால், அங்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடித்து சென்று நகரத்தின் முக்கிய பகுதியில் அடைப்புகளை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயத்தோடு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பையை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில், காங்கயம்.

மேலும் செய்திகள்