பல்லடம் பா.வஞ்சிபாளையம் பிரிவு பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து கழிவுநீர் சாலையில் திறந்து விடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதேபோல் சாலையோரம் குப்பைகள், முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பார்களா?