சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலையோரங்களில் சிலர் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.