நோய்த்தொற்று பரவும் அபாயம்

Update: 2026-05-03 18:16 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட கூத்தூர் ஊராட்சி வில்வாகுடி பகுதியில் கவுரவ் பன்மாடிக்கட்டிடம் உள்ளது. இதை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கால்வாய் தற்போது சாக்கடை கிடங்காக மாறிப்போய் உள்ளது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கழிவுப் பொருட்களை கால்வாய் பகுதியில் வீசுகின்றனர். மேலும் இந்த குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இதில் தான் கலக்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்