சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு கடந்த பல மாதங்களாக தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காணப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளுக்கு தீவைத்து எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.