திண்டுக்கல் கிழக்கு தாலுகா,பாலகிருஷ்ணாபுரம் ராஜீவ் நகர் பகுதியில் சில மாதங்களாக குடியிருக்கும் இடத்தில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வருகிறார்கள்.இதனால் துர்நாற்றம் வீசி அருகில் உள்ளவர்கள் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமலும் நடவடிக்கை எடுக்காமலும் இருந்து வருகிறார்கள். உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.