காஞ்சீபுரம் மாவட்டம், கிழக்கு ராஜ வீதியில் உள்ள மச்சேச பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தமானது. பக்தர்கள் பலர் சாமி தரிசிக்க வரும்நிலையில், கோயிலின் அருகே குப்பைகள் மேடு போல காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பக்தர்கள் மூக்கை கைக்குட்டையால் மூடி செல்லும் அளவிற்கு மோசமாக உள்ளது. எனவே குப்பைகள் அகற்ற உடனடி நடவடிக்கையை இதுதொடர்பான அதிகாரிகள் எடுக்க வேண்டும்.