குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள சாலை, நான்கு வழிச்சாலையுடன் இணைப்பதற்காக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது நெடுஞ்சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.