சுகாதார சீர்கேடு

Update: 2025-12-21 12:22 GMT

கோவை சுந்தராபுரம் சரவணா நகர் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்களும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை அங்கேயே மேற்கொள்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு நிலவுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்