பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாயில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை முறையாக தூர்வாரி குப்பைகளை அகற்ற வேண்டும்.