கரூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் உள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.