ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.