நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-09-28 15:11 GMT

மதுரை கூடல் நகர் சாலையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் போலீஸ் சோதனைச்சாவடி அருகில் வைக்கப்படுள்ள குப்பை தொட்டிகள் நிறைந்த நிலையில் தற்போது வரை அகற்றப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றம் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, அதிகாரிகள் நிறைந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்