ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் ராமேசுவரம் மெயின் சாலையின் வலது புறத்தில் உள்ள சோத்தூர் ஊருணியில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.குப்பைகளால் ஊருணியில் தண்ணீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே ஊருணியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?