மதுரை தெற்கு வாசல், தெற்கு மார்ட் வீதி குறுக்கு தெருவில் குப்பைகள் அள்ளப்படாமல் சாலையில் குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. மேலும் காற்றில் குப்பைகள் பறந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.