காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் உள்ள பட்டூர் பகுதி பாத்திமா நகர், இஷாக் நகர் செல்லும் வழியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் மர்மநபர்கள் இறைச்சியின் கழிவுகள், சாணம், மற்றும் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி, தொற்று நோய் ஏற்படும் அவல நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாங்காடு இந்த குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.