பாளையங்கோட்டை முத்தாரம்மன் கோவில், சங்கிலிபூதத்தார் கோவில், தனியார் பள்ளிக்கூடம் அருகில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் அங்கு சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.