சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-06-08 17:48 GMT

சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நலவாரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் தாசநாயக்கன்பட்டி பிரிவு ரோடு உள்ளது. இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. மேலும் பிரதான சாலையையொட்டி உள்ள நடைபாதையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகம் சுழித்த வண்ணம் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றவும், கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சசிகுமரன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்