மதுரை சிலைமானை அடுத்த சக்கிமங்கலம் பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகம் அப்பகுதிகளில் கூடுதல் குப்பை தொட்டிகளை வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.